நல்லோர் ஒருவர் உளரேல்...

ஏமாந்து
அடிபட்டு
மிதிபட்டு
அவமானப் பட்டு
இதற்கு மேலும்
நல்லவனாயிருப்பது நல்லதற்கல்ல என்று
தன்பரிதாபத்தில்
தடம் தப்பப் போகையிலெல்லாம்

உன்னைப் போல்
ஒருத்தனோ ஒருத்தியோ
வந்து விடுகிறீர்கள்

இந்த உலகத்தில்
இன்னும் நல்லோர் பலர் உளர் என்றும்

சிறுமைகளின் போதெல்லாம்
நான் நினைத்து நினைத்துப்
பெருமைப் பட்டுக் கொள்ளுமளவுக்கு
நானொன்றும்
உங்களைக் காட்டிலும்
நல்லவனில்லை என்றும்

உங்களுக்காகவாவது
இப்படியேவாவது
நான் இருந்து தொலைந்து விட வேண்டுமென்றும்
நினைவுபடுத்திக் கெடுத்து விடுகிறீர்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி